முதல் சந்திப்பில்…!

Standard


ஆண்டுகள் தான் பல சென்றாலும் 
உன்னை விட்டு நான் பிரிந்தாலும் 
வற்றாத நதியாக உன் நினைவு 
வானமே எல்லையாக நம் நட்பு 

பருவ வயதினிலே 
பாடசாலை வேளையிலே 
புதிதாய் நீ வந்தாய் 
நான் இருந்த வகுப்பினிலே 

விழி இரண்டும் பதுங்கிடவே
மேனி அது நடுங்கிடவே 
படபடத்த நெஞ்சோடு 
என் அருகில் நீ அமர்ந்தாய் 

உன் பேரைக் கேட்டிடவே 
தயங்கி விட்டு நீ சொன்னாய் 
பார்ப்பதற்கு பரிதாபமாய் 
ஒன்றும் அறியாதவளாய் 
பயத்தோடு நீ இருந்தாய் 

உனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 
அறிமுகம் செய்துவிட்டேன் 
நம் வகுப்பின் நண்பிகளை 
நமது முதல் சந்திப்பை நினைக்கையிலே 
இன்றும் எனக்கு வேடிக்கைதான் 
இனம் புரியாத சந்தோஷம் தான் .....
/////////////ராதிகா றேமன்/////////////

2 responses »

  1. அழகாக வடிவமைத்து கவிதை வளர்கிறது வாழ்த்துக்கள்!! நன்றாக இருக்கிறது

Leave a reply to rathika reman Cancel reply