ஆண்டுகள் தான் பல சென்றாலும் உன்னை விட்டு நான் பிரிந்தாலும் வற்றாத நதியாக உன் நினைவு வானமே எல்லையாக நம் நட்பு பருவ வயதினிலே பாடசாலை வேளையிலே புதிதாய் நீ வந்தாய் நான் இருந்த வகுப்பினிலே விழி இரண்டும் பதுங்கிடவே மேனி அது நடுங்கிடவே படபடத்த நெஞ்சோடு என் அருகில் நீ அமர்ந்தாய் உன் பேரைக் கேட்டிடவே தயங்கி விட்டு நீ சொன்னாய் பார்ப்பதற்கு பரிதாபமாய் ஒன்றும் அறியாதவளாய் பயத்தோடு நீ இருந்தாய் உனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அறிமுகம் செய்துவிட்டேன் நம் வகுப்பின் நண்பிகளை நமது முதல் சந்திப்பை நினைக்கையிலே இன்றும் எனக்கு வேடிக்கைதான் இனம் புரியாத சந்தோஷம் தான் ..... /////////////ராதிகா றேமன்/////////////
Sep19
அழகாக வடிவமைத்து கவிதை வளர்கிறது வாழ்த்துக்கள்!! நன்றாக இருக்கிறது
நன்றி அண்ணா .. உங்கள் கவியும் சூப்பர்.