கொடியது கொடியது வலியது கொடியது தனிமையின் வலியது மானிடவாழ்வில் கொடியதிலும் கொடியதுவே தாயவள் நேசமும் கருணையும் தனிமையில் இல்லையே இன்பமும் துன்பமும் அணுகிடும் வேளையில் அதைபகிர்ந்திட என்னை வாழ்திட ஆறுதல்கூறிட அவள் அருகில் இல்லையே. தினம்தினம் அவள் நினைவுகள் தொல்லையே தலைவலி வந்தாலும் பனடோல் மாத்திரை தஞ்சமே அன்னையவள் அருகில்இருந்தென் தலைதனைதடவிட தலைவலிமாறுமே என் நெஞ்சமது மகிழ்வில் மூழ்குமே அக்காவின் அரவணைப்பும் தங்கையின்புன்சிரிப்பும் ஒன்றாய் இருக்கையில் கொண்டாட்டமே இன்று தனிமையில் இருக்கையில் அவர்கள் பிரிவால் என் மனம் வலியால் துடிக்குதே சொந்தம் பந்தம் என்று புடைசூழ வந்திடுவர் பணம்ஒன்றுஇல்லை என்றால் எட்டிக்கூட பார்க்க மாட்டார் அன்றாடதேவையோடு உடல் உழைத்துகளைத்தாலும் சோகங்கள் பலசுமந்து தனிமையின்வலியோடு பலகாலம் வாழ்ந்துவிட்டேன் என் தாயின் கரம்கொண்டு சோறூண்டு அக்கா,தங்கையோடு,அவர்மழலையும் என் தோள் சுமந்து ஒன்றாய் உறவாடும்அன்நாளில் என்தனிமைஎன்னும் கொடுமையின் வலி நீங்குமே. யாழவன்~~ராஜன் (கட்டார்)
Sep20